Tuesday 29 May 2012

சோழர் பற்றி சன் தொலைகாட்சியின் "நிஜம்" நிகழ்ச்சி

About Chola on Nijam Program of Sun TV



சோழர் வாரிசு பற்றி சன் நியூஸ் தொலைக்காட்சி


About Chola Descendants on Sun News Channel 



"இன்றும் வாழும் சோழ மன்னர்கள்" - ஆவணப்படம்

Living Chola descendants - Documentary by Annal Veliyeedu





Monday 21 May 2012

ஆதித்ய சோழன் பள்ளிப்படை





கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.
தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது. 
ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான். 
அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம். 
ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.
இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். 
இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது. 
இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். 
சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?
இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான். 

400 வருட பழமை வாய்ந்த குதிரை யானை பரிவார சிலைகள்


தமிழ் நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரை அடுத்து செந்துறைக்கு அருகில் உஞ்சனை பஞ்சாயத்தில் உள்ள் அருள்மிகு பெருவிழியப்பன் ,அருள்மிகு பாவயி அம்மன் ,அருள்மிகு கருப்பண்ண சுவாமி ,அருள்மிகு ஐய்யனார் சுவாமி கோவிலில் உள்ள குதிரை யானை பரிவார சிலைகள் .

இந்த கோவில் சோழர் வழி வந்த வன்னிய குல சத்திரியர்களுக்கு சொந்தம்.

மயிலை சீனிவாசன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும்








பாவேந்தர் பாரதிதாசனால் இப்படி பாராட்ட பட்ட மயிலை சீனி வேங்கடசாமி நாயகர் அவர்களுக்கு அவர் வாழ்ந்த சென்னை மைலாப்பூரில் ஏதாவது நினைவு சின்னங்களை வைத்தார்களா இதுவரை ஆட்சி செய்த முதல்வர்கள்? வன்னியருக்கு எதிரான சாதி வெறி தானே இதற்க்கு காரணம். இதுவே அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் வைத்திருப்பார்கள்...



வன்னியர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் போராளிகள் என்பதற்கான அடையாளமே திரெளபதி வழிபாடு. - பெ.பழநிச்சாமி




மகாபாரதக் கதையின் நாயகியான திரெளபதி அக்னியில் அவதரித்தவர் என்பது புராணவழி வரலாற்றுச் செய்தியாகும். திரெளபதியைப் போலவே வன்னியர்களும் அக்னியில் தோன்றியதாக வன்னிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதியில் இன்றும் வன்னியர்கள் அக்னி குல சத்ரியர் என்றே அழைக்கப்படுகின்றனர்.
1929இல் சென்னை மாகாண சட்டமன்றத் தீர்மானம் வாயிலாக தமிழ்ப்பகுதிகளில் வன்னியர் குல சத்ரியர் என்றும் ஆந்திரப் பகுதிகளில் அக்னி குல சத்ரியர் என்றும் வழங்க அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தாண்டி வன்னியர்களை தனித்து அடையாளப்படுத்துவது வன்னயர்களிடத்தில் மட்டுமே உள்ள திரெளபதி வழிபாடும் அதையயாட்டிய மக்கள் கலை வடிவமான தெருக்கூத்தும் ஆகும். வன்னியர்கள் திரெளபதி வழிபாட்டின் பெரும்பங்கை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பதற்கு
திரெளபதியும் வன்னியர் குல சம்புமகரி´யைப் போல் யாகத்தீயில் அவதரித்தது.
வன்னியர்கள் அர்ச்சுனன் பிறந்த பங்குனி உத்திரம் நட்சத்திரத்தை உருத்திர வன்னிய மகாராஜா விழாவாகக் கொண்டாடுவது.
பாண்டவர்கள் 12 வருட வனவாசத்திற்கு பிறகு 1 வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்களின் ஆயுதங்களை; வன்னிமரத்தில் மறைத்து வைத்து கொடுத்தது.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள காவிரிக்கு வடக்கில் உள்ள மாவட்டங்களில் திரெளபதி வழிபாடும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட தெருக்கூத்தும் இன்றளவும் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது, இவைகள் காரணங்களாக இருக்கலாம்.
*
இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் மகாபாரத யுத்தம் நடந்த பகுதிகளான குருசேத்திரம் அஸ்தினாபுரம் ஆகியவை வட இந்தியாவில் இருந்தாலும் சுட அங்குள்ள ராஜபுத்திரர்களை விடவும், ஜாட்டுகளை விடவும் வன்னியர்களே திரெளபதி வழிபாட்டையும் அதனோடு சேர்த்து பாரத கூத்துக்கலையையும் பாதுகாத்து வருகின்றனர். புராணக்கதைகள் தமிழ்நாட்டில் செவி வழி இலக்கியமாக எவ்வளவு காலமாக இருந்தது என்பது கணிக்க முடியவில்லை. ஆனால் சிலப்பதிகாரம் மற்றும் பெருந்தேவனார் இயற்றிய பாரதம் ஆகியவற்றில் பாரத கதையின் தாக்கம் தென்படுகிறது.
திரெளபதிக்கு மூலக்கோயில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள மேலச்சேரி திரெளபதி அம்மன் கோயில்தான் தமிழக திரெளபதி அம்மன் கோயில்களுக்கெல்லாம் மூலமானது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலச்சேரியில் உள்ள திரெளபதி அம்மனின் காவல் தெய்வமாக போத்துராஜா உள்ளதாலும் அருகில் உள்ள சிங்காவர் ரங்கநாதர் மற்றும் மேலச்சேரி பல்லவேஸ்வரம் புடைசிற்பக் கோயில்கள் பல்லவர்களால் கட்டப்பட்டதாலும் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் பழைமையானது மேலச்சேரி திரெளபதி அம்மன் ஆலயமாகும். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆல்ப் யஹலிடிபெடல் திரெளபதி வழிபாடு குறித்து ஆய்வு செய்தபோது மொத்த திரெளபதி அம்மன் கோயில்களில் 90%க்கும் மேல் வன்னியர்கள் செறிவாக வசிக்கும் தென்னாற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு, சேலம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை மற்றும் பெங்களூர், கோலார், சித்தூர்நெல்லூர் பகதிகளிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரெளபதி அம்மன் கோயில் பூசாரிகளும் நிர்வாகிகளும் 90% வன்னியர் வசமே உள்ளது. 1888‡இல் டாக்டர் குத்சேவ் ஒப்பர்ட் பாரத பூர்வ குடிகள் என்னம் நூலில் பக்கம் 97‡இல் தென்னாற்காட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில்கள் மட்டும் அல்லாது அர்ஜூனனுக்கும் நாக கன்னி (உலுபி)க்கும் பிறந்த அரவான் பாரத யுத்தத்திற்கான முதல் களப்பலியானதன் நினைவாக திருநங்கைகள் கொண்டாடும் கூத்தாண்டவர் கோயில் இந்தியாவிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் சித்ராபவுர்ணமி நாளில் திருநங்கைகள் திருவிழா மிகப்பெரிய அளவில் நடக்கிறது. அந்த கோயிலும் வன்னியர் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 45 திரெளபதி அம்மன் கோயில்கள் உள்ளன. இது தவிர பாஞ்சாலியம்மன் கோயில்களும் உள்ளன. சேலம் மாவட்டத்தை ஒப்பிடும்போது தருமபுரி ‡கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திரெளபதி வழிபாட்டின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அதியமானின் சங்ககால ஆட்சியில் தகடூர் என்று அழைக்கப்பட்ட ஊர் பாரதக் கதையின் தாக்கத்தினால் தர்மரின் பெயரால் தர்மபுரி ஆனது. அதேபோல் பாரதப் போரின் சூத்திரதாரியான கிருஷ்ணனின் பெயரால் கிருஷ்ணகிரி ஆனது. செஞ்சியிலும் மேலச்சேரி திரெளபதி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மலையின் பெயரும் கிருஷ்ணகிரி என்றே அழைக்கப்படுகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள செல்லக்குட்டப்பட்டி, வடகாசி, பெண்டர அள்ளி (அரசம்பட்டி) வையம்பட்டி, கொல்லப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள திரெளபதி அம்மன் கோயில்கள் வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்கும் கோயில்களாகும். மேலும் பாலக்கோடு வட்டத்தில் புலிக்கரை கோயிலூரில் உள்ள குந்தியம்மன் கோயிலும் வன்னியர்களின் குலதெய்வக் கோயில்தான்.  தருமபுரி வட்டம் உங்கார அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளியனூரில் துரியோதனனை (பெரியாண்டவர்) குலதெய்வமாக வணங்கும் வன்னியர்களும் உள்ளனர். பாரதக் கதையோடு தொடர்புடைய துர்வாச முனிவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையிலும் அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கு சூலாமலையிலும் கோயில்கள் உள்ளன.
இவ்வாறாக திரெளபதி வழிபாடானது வன்னியர்களிடம் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பிரதான தெருக்கூத்து வடதமிழகத்தில் வன்னியர் செறிவாக வாழும் திரெளபதி அம்மன் கோயில்கள் அதிகமிருக்கும் பகுதியிலேயே பெரும்பாலும் கோடைகாலங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் வாதாபி சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மன் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டுள்ளார். கோட்டையை எவ்வளவோ முயற்சித்தும் தகர்க்க முடியவில்லை. பிறகு சமாதானம் பேசி மகேந்திரவர்மனுடன் உறவாடிவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் மக்களையும் கால்நடைகளையும் அழித்ததோடு; விளைந்த பயிருக்கும் தீங்கு விளைவித்து கொன்றுவிட்டதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அதற்கு பழிவாங்கும் விதமாக புலிகேசியை வென்று வாதாபியை அழிக்க பெரும்படை திரட்ட வேண்டியதாயிற்று அப்பொழுதிருந்தே பாரத்தை படித்து தர்மத்திற்காக போராட என மக்களிடம் போர்க்குணத்தை விதைக்க திரெளபதி அம்மன் கோயில்களும் அதைச் சேர்த்து பாரதம் படித்ததாலும் தெருக்கூத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. "பாரதக் கதைபடிப்பதற்கு பல்லவர் காலத்தில் கூத்தர் மானியங்கள் வழங்கப்பட்டதாக கூரம் செப்பேடுகள் மூலம் அறிகின்றோம்." வாதாபியை நரசிம்மவர்மன் வென்ற வரலாற்று நிகழ்வுதான் வன்னியர் புராணம் என்ற கதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் படைகளாக்கி அதாவது தங்களை எதிர்க்கும் பகைவர்களை வெல்ல உள்ளத்தில் எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்குவதற்காகவே தெருக்கூத்துக்கலை பாரதக் கதை வழியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சினிமா கவர்ச்சி யுகத்திலும் தெருக்கூத்து ஓரளவேனும் உயிருடன் இருக்கிறது என்றால் அதற்கு வன்னியர்களே காரணம்.

ஆகவே திரெளபதி வழிபாடு வன்னிய குலத்தினர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் போராளிகள் என்பதற்கான அடையாள வழிபாடாகவும். தெருக்கூத்து வடதமிழக தேசியக்கலையாகவும் இருக்கின்றன.

பெரும்பாலும் வன்னியர்களிடம் மட்டுமே திரெளபதி வழிபாடு இருக்கிறது என்பது இக்கட்டுரை மூலம் நிறுவப்பட்டுள்ளது. வன்னியர்கள் திரெளபதி வழிபாடு செய்வதற்கு என்ன காரணம் என்பதற்கு விரிவான ஆழமான
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

நன்றி : http://achamillai.org/ta/component/k2/item/11-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

கடந்தையார்:


 தகவலை வழங்கிய சொந்தம் திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :
சம்புவராயர்,காடவராயர், கச்சிராயர்,வாணகோவரையர், மழவராயர் என்ற பெயர்களில் வன்னியர்கள் சிறு பகுதிகளை சோழர் காலந்தொடங்கி ஆண்டு வந்துள்ளனர்.

வன்னிய குலத்தினருள் கடந்தையார் என்ற பிரிவினர் உள்ளனர்.

இவர்கள் கி.பி. 16 ஆம் நுற்றாண்டில் பெண்ணாடத்தை ஆண்ட பாளையக்காரர்களாக அறியப்படுகின்றனர்.

இரு நூல்களைக் கொண்டு இப்பாளையக்காரர்கள் பற்றியும் அவர்கள் யார் என்பது பற்றியும் அறிய முடிகிறது.

கடந்தையார்களைப் பற்றி ஒரு செப்பேடு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 1 இல் பக்கம் 1263 இல் இதனை பற்றிய செய்தி உள்ளது.

செப்பேட்டின் மூலம் அறியப்படும் பெண்ணாடம் பாளையக்காரர்கள் :

1.பிரளயங்காத்த கடந்தையார் 2. பொன்னளந்த கடந்தையார் 3.பெரிய நாயக கடந்தையார் 4.ராமநாதக் கடந்தையார்.

இக்கடந்தையார்களின் உறவினராக அறியப்படுபவர்கள் குண்ணத்தூரை ஆண்ட வன்னிய பாளையக்காரர்களான மழவராய நயினார்கள்.

கடந்தையார்களும், குண்ணத்தூர் மழவராயர்களும் உறவின் முறையினராக (பெண் கொண்டு பெண் கொடுப்பவர்களாக) இருந்திருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அந்தச் செப்பேட்டை கி.பி.1512 இல் பெரிய நாயகக் கடந்தையார் வெளியிட்டிருக்கிறார்.

பெண்ணாடம் பகுதியில் வாழ்ந்து வரும் கடந்தையார் பட்டம் கொண்ட வன்னியர்களுக்கு கடந்தை ஈச்சரன் கோயிலில் இன்றும் முதல் மரியாதை செய்யப் பெற்று வருகிறது.

(நன்றி: வன்னியர் - நடன.காசிநாதன்)

------

இந்த கடந்தையார் என்பவர்களின் முந்தைய நிலை என்ன?

பென்ணாகடம், குடிகாடு, திட்டக்குடி,பெரம்பலூர், செந்துறை பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்களான இக்கடந்தையார்கள் சோழர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், பாடி காவல் அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு "வங்கார முத்தரையர்" என்ற பட்டம் உண்டு.

சோழர் காலத்தில் ஆட்சியாளர்களாக அறியப்பட்ட வங்கார முத்தரையர் பட்டம் கொண்ட கடந்தையார்கள்:

1. சேந்தன் கூத்தாடுவானான ராஜராஜ வங்கார முத்தரையன் (2 ஆம் ராஜ ராஜ சோழன் காலம்)

2.கடந்தை சேந்தன் ஆதித்தன் ராஜராஜ வங்கார முத்தரையன்.

3.ஆதித்தன் மண்டலியான ராஜாதிராஜ வங்கார முத்தரையன் (சோழன் 2 ஆம் ராஜாதிராஜன் காலம்)

4.பொன்பரப்பினான் வீர வங்கார முத்தரையன் (3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)

5.கடந்தை ஆதித்தன் மண்டலியான வங்கார முத்தரையன் ( 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)

6.மண்டலியான ராஜராஜ வங்கார முத்தரையன்.

7.வங்காரமுதரையனான பொன்பரப்பினார் (3 ஆம் ராஜராஜ சோழன் காலம்)

(நன்றி: வரலாற்றில் பெண்ணாகடம்)

Saturday 12 May 2012

மக்கள் தொலைகாட்சியில் சித்திரை முழுநிலவு வன்னியர் பெருவிழா காட்சி தொகுப்பு ஒளிபரப்பாகிறது.

இன்று சனிக்கிழமை (12.05.2012 ) மற்றும் ஞாயிற்று கிழமை (13.05.2012) மாலை 7 மணிக்கு நமது மக்கள் தொலைகாட்சியில் சித்திரை முழுநிலவு வன்னியர் பெருவிழா காட்சி தொகுப்பு ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள் !!!!! அய்யாவின் ஆணையை ஏற்று அலைகடலென திரண்ட மண்ணின் மைந்தர்களை...வங்க கடலை மிரட்டிய சிங்க கடலை காணுங்கள். குறிப்பாக அய்யாவை கிண்டல் அடிக்கும் ஈன பசங்க நிச்சயம் பாருங்க...நன்றி !!!!

Thursday 10 May 2012

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants )


சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants ) 

 

சோழர்கள் தமிழகத்தின் தொன்மையான மூன்று அரச குடும்பங்களில் ஒருவர். சூரிய குலத்தோர் என்று இடைக் கால இலக்கியங்களிலும், ஞாயிறு குலத்தோர் என்று சங்க இலக்கியங்களாலும் அறியப் பட்டவர்கள். போர்க் களத்தில் தோல்வியே காணாத ஏழு இந்திய அரசர்களில் மூவர் சோழ அரசர்கள்.
விஜயாலயச் சோழனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட வம்சம். இந்திய அரசர்களில் முதலும் கடைசியாகவும் வெளிநாட்டின் மீது  படையெடுத்துச் சென்று வென்ற வம்சம்.
இந்த வம்சத்தின் வாரிசுகள் இப்போது இருக்கிறார்களா?
இருந்தால் எங்கு இருக்கிறார்கள்?
பல விதமான சாதி அமைப்புகள் இப்போது சோழர்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களில் எந்த இனத்தில் உண்மையாக சோழர்கள் இருக்கிறார்கள்?
அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா?
அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையா?
அப்படியானால் இப்போது யாரேனும் சோழர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்கள் சாளுக்கிய சோழர்களாகத்தான் இருக்குமோ?
 சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
இந்தக் கேள்விகள் வரலாற்றில் ஆர்வமுடைய அனைவருக்குமே இருக்கக் கூடிய கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கான விடை தேடலே இந்தக் கட்டுரை.
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கிடைக்கின்ற ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டுமே தவிர, ஒரு சார்புடையதாய் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்கக் கூடாது.
முதலில் அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா
அவ்வாறு முயற்சித்தால் அதனால் குழப்பமே மிஞ்சும் என்றக் கூற்று உண்மையா என்றுப் பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் சோழர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது. அவர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைத்து சாதியினரும் அவர்களை சொந்தம் கொண்டாடுவது சந்தோஷமான விஷயமே. தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதில் ஈடுபடாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? தமிழர்களின் மக்கள் தொகை ஒரு கோடியைக் கூடத் தாண்டாத கால கட்டத்தில் ஒன்பது லட்சம் பேர் கொண்ட கட்டுக்கோப்பான வலிமை வாய்ந்த ராஜேந்திர சோழரின் படையில் இடம் பெறாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? சோழர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்றாலும், அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என ஆராய வேண்டுமெனில், இப்போது உள்ள சமூக அமைப்பில் அவர்கள் ஏதேனும் ஒரு சாதி அமைப்புக்குள்ளேயே இருந்தாக வேண்டும்.
எனவே சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்களை ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இப்போதுள்ள ஜாதி அமைப்பே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததா என்றால் அது சந்தேகமே. உதாரணமாக தற்போது தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னியகுல க்ஷத்ரியாவிலுள்ள பொதுவானக் குடும்பப் பெயர்கள்(மழவரையர், பழுவேட்டரையர், உடையார்,கண்டியத்தேவர்,….).
எனவே குடும்பப் பெயரை வைத்தே இவர்களை அடையாளம் காண இயலும். சோழர்களின் குடும்பப் பெயர் சோழர் என்றுதான் இருக்க வேண்டுமே தவிர தேவர் என்றோ உடையார் என்றோ அல்ல என்ற அடிப்படை விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்:
1. தேவேந்திர குல வேளாளர்
2.
முக்குலத்தோர்
3.முத்தரையர்
4 .
பார்க்கவ குலத்தோர்
5 .
தஞ்சைக் கள்ளர்கள்
6 .
வன்னிய குலச் சத்ரியர்
1 தேவேந்திர குல வேளாளர்:

                                                      
இவர்கள் பள்ளர் அல்லது மள்ளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வசிப்பது பெரும்பாலும் தென் தமிழகத்தில். தங்களைச் சோழர்கள் என்று அழைப்பதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும் இவர்களிடம் இல்லை. பள்ளர் அல்லது மள்ளர் என்றப பட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் சேர,சோழ,பாண்டிய ஆகிய மூன்று வேந்தர்களுக்கும் உரிமை கோருகின்றனர். இவர்களுடைய வாதம் ஆதாரமற்றது, வலுவில்லாதது. 
2 முக்குலத்தோர்:

                                     
முக்குலத்தோர் சோழர்களுக்கு உரிமைக் கோருவது, சோழர்கள் பயன்படுத்திய கூடுதல் பட்டமான தேவர் என்பதை வைத்தும் அவர்களின் கல்வெட்டுக்களில் களவர் என்ற சொல் காணப்படுவதை வைத்தும். ஆனால் தேவர் என்றப் பட்டம் சோழர்களுக்குத் தாய் வழிப் பட்டமாக கண்டியத்தேவர் வம்சத்திலிருந்து வந்தது. இந்தக் கண்டியத்தேவர் பட்டம் தஞ்சைக்கள்ளர் மற்றும் வன்னிய குல சத்ரியாவில் உள்ளது. களவர் என்பது சோழர்களைக் குறிப்பதாகக் கொண்டால், அது களம்(போர்க்களம்) காண்பவர் என்றப் பொதுவானப் பொருளைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டக்கூடிய தேவர் என்றப் பட்டம் தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னிய குல சத்ரிய வகுப்பைச் சேர்ந்தப் பட்டப் பெயர் என்பதாலும்,களவர் என்று குறிப்பது களம் காண்பவர் என்றப் பொதுவானப் பொருள் தருவதாகவோ அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாகவோ இருப்பதாலும்,இவர்கள் பெரும்பான்மையாக வசிப்பது தென் தமிழகத்தில் என்பதாலும், சோழர்களுக்கான இவர்களின் உரிமைக் கோரல் வலுவற்றதே.
 
3.முத்தரையர்:
                                இவர்களுடையப் பெயரே போதுமான அளவுக்கு விளக்கம் கொடுத்து விடுகிறது. அரையர் என்றால் சிற்றரசர் அல்லது குறுநில மன்னர்கள் என்று பொருள். இவர்களும் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் மூவேந்தர்களுக்கும் உரிமைக் கோருகின்றனர். இவர்கள் மூவேந்தர்களின் வாரிசு என்பது உண்மையானால், தங்களை அரையர் என்று அழைத்துக் கொள்வதில் திருப்தி அடைந்துவிடுவார்களா என்பது சந்தேகமே. இவர்கள்  மூவேந்தர்கள் யாருக்காவது உரிமை கோர வேண்டுமென்றால் அது பாண்டியர்களாக இருக்கலாமே தவிர சோழர்கள் அல்ல. 
4 . பார்க்கவ குலத்தோர்:

                                        
ராஜராஜ சோழன் மற்றும் அவருக்குப் பின் வந்த சோழர்கள் பயன் படுத்திய உடையார் என்றப் பட்டம் பார்க்கவ குலத்தைச் சேர்ந்தது என்பதை வைத்து இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுகின்றார்கள். உடையார் என்றப் பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டமாகும். ராஜராஜனின் தாயார் மலையமான் வகுப்பைச் சேர்ந்தவர்.  உடையார் என்பது இந்த மலையமான் வகுப்பினரின் ஒருப் பட்டம். தற்போது மலையமான் வகுப்பினர் தஞ்சைக் கள்ளர்கள்,வன்னிய குல க்ஷத்ரியா மற்றும் பார்க்கவ குலம் ஆகிய மூன்று இனங்களிலும் உள்ளனர். எப்படி இருந்தாலும் இதுத் தாய் வழிப் பட்டமே. அவர்கள் சோழர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள் அவ்வளவே.
5 . தஞ்சைக் கள்ளர்கள்

                                     
கள்ளர்கள் என்றால் கருப்பு நிறத்தவர், போருக்கு முன்பு ஆநிரைக் கவர்வோர், போர்க்களம் புகுவோர்,  திருட்டுத் தொழில் புரிவோர் என்று வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. தென் தமிழகத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் இனக் கள்ளர்கள் இவை அனைத்தும் தங்களுக்குப் பொருந்தக் கூடியது எனக் கூறுகின்றனர். ஆனால் தஞ்சைக் கள்ளர்கள் தாங்கள் போர்த் தொழில் புரிவோர் என்றப் பிரிவைச் சேர்ந்ததாகக் கூறுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் பலவகையானப் பட்டங்களைப் பார்க்கும் போது, இதை உண்மையாகக் கருதலாம். முக்குலத்தோர் இவர்களைத் தங்களில் ஒருவராகக் கூறிக் கொண்டாலும் இவர்கள் தங்களைத் தனிப் பிரிவாகவேக் கூறிக் கொள்கின்றனர்.அடிப்படையில் இவர்கள் முக்குலத்தோர் பிரிவில் இருந்து வந்தவர்கள் இல்லை. இவர்களுக்கும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தத் தென் தமிழகத்துக் கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மரபியல் படியும் இவர்களுக்கும் தென் தமிழகத்து முக்குலத்தோர் இனக் கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மரபியல் படி இவர்களுக்கும் வன்னியர்களுக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மண உறவு கொள்வார்களா என்பது சந்தேகமே.ஆனால் இவர்கள் வன்னியர்களுடன் மண உறவுக் கொள்கின்றனர். சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களும் இவர்களுக்கு உண்டு. சோழகன் என்றப் பட்டப் பெயரும் இவர்களிடம் இருந்தாலும் சோழகன் என்பது கள்ளரினத்தின் ஒரு காட்டுச் சாதி என்பதால் இவர்களில் சோழ வம்சத்தினரைத் தனித்துப் பார்ப்பது அவசியம். இவர்களிடம் இருக்கும் சோழ அல்லது சோழங்க என்று ஆரம்பிக்கும் மற்றப் பட்டங்கள் சோழ கங்கன், சோழங்க தேவர்சோழங்க நாட்டார், சோழங்க தேவ அம்பலக்காரர் என்பவை. இதில் சோழ கங்கர் என்பது சோழர்கள் கங்க நாட்டை வென்ற பிறகு அந்த நாட்டை ஆண்ட சோழர்களின் பிரதிநிதிக்குக் கொடுக்கப்பட்டப் பட்டம். இவர்கள் சோழர்களின் ரத்த சம்பந்தம் உடையவராகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். சோழங்க தேவர், சோழங்க நாட்டார் என்றப் பட்டமுடையவர்களைப் பார்த்தோமானால், அவர்களுடைய உண்மையானப் பட்டமென்பது தேவர், நாட்டார் என்று இருந்திருக்கக் கூடும். சோழங்க என்றப் பெயர் முன்னால் இணைந்திருப்பதற்கு வேறு காரணம் இருக்கக் கூடும். உதாரணமாக சோழங்க என்பது தாய் வழிப் பட்டம் அல்லது மன்னர்களின் படைவீரர்க்கு மன்னரே அவர்தம் பெயரையே கொடுப்பது போன்று ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். இதே போன்று சோழங்க ஆரச்சி (solangaarachchi )  என்ற சிங்களவருக்கு உள்ளப் பட்டத்தையும் பார்த்தோமானால் இது அச்சு அசலாக சோழங்க நாட்டார் என்பதற்கு இணையான சிங்கள வார்த்தை. ஆரச்சி என்ற சிங்கள வார்த்தைக்கு கிராமத் தலைவர் அல்லது நாட்டார் என்று பொருள். சோழங்கன் என்ற ஊர் இலங்கையில் இருப்பதையும் சோழர்கள் சில சமயங்களில் சிங்கள இளவரசிகளை மணந்தார்கள் என்பதையம் கவனத்தில் கொள்ள வேண்டும். தஞ்சைக் கள்ளர்களின் இருப்பிடம் தஞ்சை என்பதும் இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கிறது. சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன்( அங்கன் என்றால் மகன் என்று பொருள்) என்பவை இவர்களிடம் இருப்பதாகக் கூறினாலும் உண்மையில் ஆராயும் போது அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் சோழகன் என்பது தான் சோழன் என்றும் சோழ கங்கன் என்பது தான் சோழங்கன் என்றும் கூறுகின்றனர். ஆனால் சோழகன் என்பதற்கும் சோழ கங்கன் என்பதற்கும் உள்ள பொருளை முன்பேப் பார்த்தோம். இருப்பினும் சோழன் அல்லது சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இவர்களிடம் இல்லை என்பதை நூறு சதவீதம் வரை உறுதிப் படுத்தப் படாத வரை நாம் ஏதும் முடிவெடுக்க இயலாது. இவர்கள் சோழ வம்சத்திற்கு உரிமை கோருவது ஆராயத் தக்கது.

6.வன்னிய குல க்ஷத்ரியர்:
                                                சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களுடன் சோழர்களின் குடும்பப் பெயரான சோழனார், சோழங்கனார் போன்றப் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. வசிப்பிடம் கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் மற்றும் இதற்கு இடைப்பட்டப் பகுதிகள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை இப்பொழுதும் பிச்சாவரம் சோழனார்களுக்கு வழங்கப்படுகிறது. சோழர்களில் கடைசியாக ஆட்சி புரிந்தது குலோத்துங்கன் வழி வந்த சாளுக்கிய சோழர்களே. இவர்கள் நேரடிச் சோழர்கள் போன்று சோழனார் பட்டதைப் பயன் படுத்தினாலும், அவர்களைப் போன்று மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மழவரையர், பழுவேட்டரையர் போன்றவர்கள் அவர்களுக்கு சகோதரர்கள் போன்ற முறையாகக் கருதப்படுவார்கள்.பிச்சாவரம் சோழனார்களும் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொள்வதில்லை. இவர்களின் மண உறவுப் பெரும்பாலும் உடையார் பாளையம் ஜமீன்களுடனே.  ஆனால் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகில் வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்கள் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவு வைத்துள்ளனர். சோழர்களின் கடைசித் தலை நகரம் கங்கை கொண்ட சோழ புரம் என்பதிலிருந்தும், அது கிட்டத்தட்ட 200  ஆண்டுகளாகத் தலை நகராக இருந்ததை வைத்தும் சோழர்களின் இருப்பிடம் இந்தப் பகுதியிலேயே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே இங்கு வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்களே நேரடிச் சோழர்களின் வாரிசுகளாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.


சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்
வசிப்பிடம்
சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள்
சோழர்களின் குடும்பப் பெயர்
சோழர்களுக்கான உரிமை கோரல்
1. தேவேந்திர குல வேளாளர்
தென் தமிழகம்
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
2.முக்குலத்தோர்
தென் தமிழகம்
தேவர்
இல்லை
வலுவற்றது
3.முத்தரையர்
தஞ்சை
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
4. பார்க்கவ குலத்தோர்
தஞ்சை
உடையார்
இல்லை
தவறானது
5. தஞ்சைக் கள்ளர்கள்
தஞ்சை
தேவர், உடையார்
சோழகங்கன்
ஆராயத் தக்கது
6. வன்னிய குலச் சத்ரியர்
கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம்
தேவர், உடையார்
சோழனார், சோழங்கனார்
மிக வலுவானது
























அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையாஎன்பதைப் பார்ப்போம்.
முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நான்கு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மன்னராகப் பதவியேற்றுள்ளனர். ஒருவர் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்பே அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கும். அதுவும் அரசர்கள் ஆண் வாரிசுக்காக பல திருமணம் புரிவார்கள். ராஜராஜ சோழனுக்கு மூத்தக் கிளையான உத்தமச் சோழனின் மகன் கண்டராதித்த மதுராந்தகன், இராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார். ஆதித்தக் கரிகாலனுக்கு கரிகாலக் கண்ணன் என்ற மகன் இருந்துள்ளதாக ராஜராஜனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் என்ற தம்பி இருந்ததாகவும், இவரே கங்கைப் படையெடுப்பைத் தலைமை ஏற்று நடத்தியதாகவும், கங்கை கொண்ட சோழன் மற்றும் சோழ கங்கன் என்பன இவருடையப் பட்டப் பெயர்களே என்றும் ஒரு கருத்து உள்ளது. அதி ராஜேந்திரன் இறந்தவுடன் இந்த அனைத்து நேரடி வாரிசுகளும் அல்லது அவர்களின் சந்ததியும் கூடவே அழிந்து விட்டார்கள் என்று கூற முடியுமா? அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வம்சம் முடிந்து விடவில்லை.
அப்படியானால், சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
நேரடிச் சோழர்களின் DNA மாதிரிக் கிடைத்திருக்குமானால் இவ்வளவு குழப்பங்களே வந்திருக்காது. இருப்பினும் மற்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களே ஓரளவுக்குப் போதுமானதாக உள்ளது.
முடிவுரை:

சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இப்போதைக்கு வன்னிய குல க்ஷத்ரியாவில் உள்ளது. தஞ்சைக் கள்ளர்களிடம் இந்தப் பட்டம் உள்ளது அல்லது இல்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. அதனைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் இங்குப் பதிவு செய்யுங்கள். வேறு ஏதேனும் இனங்களிலும் சோழன் அல்லது சோழங்கன் பட்டம் இருந்தாலும் இங்குப் பதிவு செய்யுங்கள்.
நன்றி  : திரு. செம்பியன் 
http://cholanar.blogspot.com/2012/04/cholas-descendants.html