Saturday 28 July 2012

வன்னியர் குரு பூஜை - வர்மாவுக்கு பிறந்தநாள் ( 27 சூலை)


வன்னியர் குருபூஜை 


இந்திய சுதந்திர போராட்ட வீரரும், ஆன்மீகவாதியும், பாரதியார் இறந்தபோது அவருக்கு இரங்கற்பா பாடிய ஒரே மனிதர். இரண்டாம் தேசிய கவி, ராஜாஜியால் அன்போடு ராஜரிஷி என்று அழைக்கப்பட்டவருமான வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தின் குல குரு, வன்னியகுல தெய்வ திருமகன் சேலம் சு. அர்த்தநாரீச வர்மா அவர்களின் 139 ஆவது பிறந்தநாள் குருபூஜை விழா அவர் மறைந்த அக்னி இஸ்தலமான திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது  . அன்று மாலையில் தேசியத்தையும் சமூகத்தையும் போற்றிய வர்மா அவர்கள் இயற்றிய படையாட்சியார் பாடல்கள் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.