Tuesday 10 May 2011

வன்னியக்குல மாவீரன் கருணாகரத் தொண்டைமான்

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழ(வன்னிய)மன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது தான் "சிலையெழுபது" எனும் நூல் .கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது இந்நூல். கருணாகர தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும் சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது.

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html

வன்னியக்குல மாவீரன் கருணாகரத் தொண்டைமான் பெருமைகளை கலிங்கத்துப் பரணி எனும் நூலின் வாயிலாகவும் அறியலாம்.